அவர்
திக்கெட்டும் திரிந்தலைந்து
திரியாக உடல்மெலிந்து...
பற்றற்று பரிதவித்து
வடபுலத்து மலையடியில்
பரமனடி கண்டுணர்ந்து
காவி உடையணிந்து
கடுந்தவத் துறவியானார்...
*
முற்றும் துறந்து
அவர்
துறவியானபின்னும்
தன்துறவுத்தனத்தை
மட்டும்
துறவாமல் தொடர்ந்தார்
*
தன்னை
கடவுள்கைக்கருவி
என்ற துறவி
பின்னர்
தான்னையே கடவுளென்றார்..?
*
துன்பத்தை உடையாக
துயரத்தை கொடையாக
கொண்டதொரு பெருங்கூட்டம்
துறவியை நாடி
துயர்நீங்கிச் சென்றது...
*
கண்டங்கள் தாண்டி
காலடிபட்டது..
பண்டங்கள் சூழ
பணமோ குவிந்தது...
*
துறவி
தன்
துறவுத்தனத்தை
மட்டும்
துறவாமல் தொடர்ந்தார்..
.*
துறந்து துறந்து
இனி
துறப்பதற்கு எதுவுமின்றி
துறவி
ஒருநாள்
துயரத்தில் ஆழ்ந்தார்...?
*
துறக்கஏதுமின்றி
துடித்த துறவி கடைசியாய்
எழுந்து கதவைத் திறந்தார்
தன்
துறவையேத் துறந்தார்..!
- டி.அருள்செழியன்
துறவையேத் துறந்தார்..!
- விவரங்கள்
- டி.அருள்செழியன்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.