lady_312முன்குறிப்பெழுதுவது

இக்கவிதை வாசிக்கும் பொருட்டு

வாசகனின் கவனத்தை ஒரு நிலைப்படுத்தல்...

 

இப்படியாக தொடங்கும்

கவிதை கருவில்

காதலை வசை பாடுவதாக

முன்னமே அறிவிக்கப்படுகிறது...

 

மூர்க்கத்தனமான முத்தமொன்றில்

மூச்சு வாங்கியபடி

அடுத்த பந்திக்கான வரிசையில்...

 

கூட்டம் சலசலப்பையும்

தனிமை சலனத்தையும்

இயல்பாகவே திணித்திருக்கிறது!

 

அடுக்கடுக்கான சத்தியங்கள்

பரிமாறப்படும் வேளையில்

எதிர்பாலின கவனம் ஈர்க்கப்படுவது

காதலை உறுதிசெய்வதாய் யூகிக்கலாம்!

 

இவ்வாறாக மலர்தல்

பூஞ்சோலை தோட்ட மறைவிலோ

இணைய தள மையங்களிலோ

பூப்பெய்தி விடுகின்றன!

 

வரைமுறைகள் தளர்த்தப்பட

அவனோ அன்றி அவளோ கூறுவதாய்

 

"அடுத்த வாரம் எனக்கு கல்யாணம்...

இப்போ போய்.. ச்சீ விடுடா"

என்பதுபோல் முடிவுபெறுகிறது

நான் வசை பாடிய காதலும்

நீங்கள் அசை போட்ட கவிதையும்!

 

- ரசிகன், பாண்டிச்சேரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.