வரிசை தப்பிய எறும்பு ஒன்று
வருகிறது தலையணை மேல்
அச்சுவார்த்த உடல்
சிறு அசைவுடன் நகர்கிறது
தலை தூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு
மீண்டும் தேடி எடுத்துக்கொண்டு போகிறது
மடியில் கட்டிவரும் என் அம்மாவின்
மரவள்ளிக் கிழங்கு வாசனையுடன்
- மாலதி மைத்ரி
மழைக்காலச் சிறுமி
- விவரங்கள்
- மாலதி மைத்ரி
- பிரிவு: கவிதைகள்
More articles by மாலதி மைத்ரி
- எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது (01 பிப் 2014)
- கடலின்றி அமையாது உலகு - நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும் (29 அக் 2013)
- தமிழக படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள் (26 அக் 2012)
- சவப்பேழையின் அரசன் (20 மே 2010)
- அறியாமைகளின் அத்துமீறல்கள் (19 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.