இன்று உலகம்
என் முன்னே வண்ணங்கள் மறைந்து
வெண் திசையாக உருக்கொண்டது
தாகம் என்னைத் தின்றெடுக்க
என் உயிர்ச்சாறையெல்லாம் கொட்டி
கோடிழுத்தேன்
அலையலையாய் புரண்டெழுந்து ஆரத்தழுவியது
இளைப்பாற நிழல் வேண்டி
கைகளை வெட்டி நட்டுக் காடாக்கினேன்
உருண்டு விளையாட
மார்புகளை வீசியெறிய மலைகளாயின
சலனமற்ற பரப்பில்
கண்களை எடுத்து
ஆற்றில் விட்டேன்
மீன் குஞ்சுகளென
துள்ளிப் பெருகின
என்னுடன் உரையாட
நாவை அறுத்து வானில் எறிந்தேன்
சிறு பறவை ஒன்று
கானத்துடன் பறக்கிறது
ஒரு நாள்
உங்கள் முன்னும்
உலகம் இல்லாமல் போகலாம்
- மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மணிமேகலைக் காப்பியத்தில் எடுத்துரைப்பின் அரசியல்
- உயிர் காக்க உதவும் பன்றியின் சிறுநீரகம்
- பசுமை திரைப்பட விழா
- திருப்பூர் குறும்பட ஆவணப்பட விழா 2023
- மௌனமே பாஷையாக...
- பார்ப்பனரைச் சேர்த்தது ஏன்?
- விரக்தியின் விளிம்பில் மோடி...!
- வீரவணக்கம்
- அரசியல் மாண்புக்கு இழுக்கு
- திராவிட இயக்கத் தமிழர் பேரவை வழங்கும் கருஞ்சட்டை விருதுகள்
- விவரங்கள்
- மாலதி மைத்ரி
- பிரிவு: கவிதைகள்