இன்று உலகம்
என் முன்னே வண்ணங்கள் மறைந்து
வெண் திசையாக உருக்கொண்டது
தாகம் என்னைத் தின்றெடுக்க
என் உயிர்ச்சாறையெல்லாம் கொட்டி
கோடிழுத்தேன்
அலையலையாய் புரண்டெழுந்து ஆரத்தழுவியது
இளைப்பாற நிழல் வேண்டி
கைகளை வெட்டி நட்டுக் காடாக்கினேன்
உருண்டு விளையாட
மார்புகளை வீசியெறிய மலைகளாயின
சலனமற்ற பரப்பில்
கண்களை எடுத்து
ஆற்றில் விட்டேன்
மீன் குஞ்சுகளென
துள்ளிப் பெருகின
என்னுடன் உரையாட
நாவை அறுத்து வானில் எறிந்தேன்
சிறு பறவை ஒன்று
கானத்துடன் பறக்கிறது
ஒரு நாள்
உங்கள் முன்னும்
உலகம் இல்லாமல் போகலாம்
- மாலதி மைத்ரி
நிறம்மாறும் திரைச்சீலைகள்
- விவரங்கள்
- மாலதி மைத்ரி
- பிரிவு: கவிதைகள்
More articles by மாலதி மைத்ரி
- எங்களை விற்கவும் வாங்கவும் யாரையும் அனுமதிக்க முடியாது (01 பிப் 2014)
- கடலின்றி அமையாது உலகு - நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும் (29 அக் 2013)
- தமிழக படைப்பாளிகளுக்கு ஒரு வேண்டுகோள் (26 அக் 2012)
- சவப்பேழையின் அரசன் (20 மே 2010)
- அறியாமைகளின் அத்துமீறல்கள் (19 மே 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.