single path

உன்னை வைத்துத்தான்
ஒவ்வோர் அழுக்கையும்
வெளுத்தேன்

என்
அரண்மனை மண்டபத்தின்
ஒவ்வோர் அறையையும்
நீதான்
திறந்துவைத்தாய்

அடுத்த ஊருக்குப்போகக்
கிடைத்த
ஒற்றையடிப்பாதை

நீ
என் கைவிளக்கன்று
மெய்விளக்கு 


பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It