மளிகை பாக்கி தொட்டு
poorமற்றோரன்ன செலவினங்களில்
கரைந்து போனது மாலையே
நேற்று பெற்ற சம்பளம்

கன்னக்கோலிட்டு
களவாட வந்தவர்கள்
மற்றவர்கள் முந்திக்கொண்ட
ஆத்திரத்தில்
விளாசிவிட்டனர் இரவில்
வெற்றாளாய் நின்ற என்னை

புகாரிட
“கவனிப்புக்கும்”
காசில்லை

இவர்களெல்லோரும்
தங்களுக்கு
தெரிந்தவர்களும்
வேண்டியவர்களும்தானே

சொல்லிவையுங்கள்
மாதாமாதம் கொடுப்பதை
அன்று மாலையே நீங்கள்
பறித்துக் கொள்வதை
அடிபடுவதாவது மிஞ்சும். 

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It