More articles by பிச்சினிக்காடு இளங்கோ
- ஒகோனியாகும் ஆபத்து தஞ்சைக்கு... (16 மார் 2017)
- மட்டைப்பந்து (03 ஜூலை 2012)
- இங்கிலாந்தே வணக்கம் (23 செப் 2011)
- அந்த “நான்” இல்லை நான் (09 பிப் 2011)
- ஒருவரை ஒருவர் எழுதிக்கொள்கிறோம் (10 ஜன 2011)
தெய்வங்கள் நம்மோடு
வாழ்கின்றன
தரிசனம் செய்வதில்தான்
எல்லாம் இருக்கிறது
உணர்தலினால்தான் அந்த
உண்மையை
ஊதிப்பெருக்கமுடியும்.
ஊதிப்பெருக்குவதிலும்
உணர்ந்து உறைவதிலும்
உறைந்து கிடக்கிறது அந்த
உன்னதம்
தேவையை உணர்ந்து
கரைவதைகாட்டிலும்
தெய்வத்தின் அடையாளம் என்ன?
கரைவதை எல்லாம்
உணரமறந்தால்
தெய்வங்கள் வாழ்ந்தும் என்ன?
தெய்வங்கள் நம்மோடு
வாழ்கின்றன
தெய்வங்கள் நம்மோடுதான்
வாழ்கின்றன
- பிச்சினிக்காடு இளங்கோ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )