ரோஜாபூப் போல இருக்கிறது அதனாலேயே
உன்னை நான் அடிக்கடி
அழவைத்துப் பார்க்கிறேன்
பூவே இத்தனை அழகென்றால்
ரோஜா பழுத்தால் அதன் நிறமும் சுவையும் மணமும்
எப்படி இருக்கும்
சாறூறிய உனது உதடுகளை
யாருக்குத் தின்னத் தருவாய்
மகளே
என் ரோஜாப் பழமே
- மாலதி மைத்ரி
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.