வார்த்தைகளில்
பார்வைகளில்
தீண்டல்களில்
எங்கும் பரவ
விட்டிருக்கிறாய்
தகக்கும் அனலை

நெருங்க முடிவதில்லை

எப்பொழுதும் எரிகிறாய்

தனியமாட்டாய்
அணைய மாட்டாய்
என்னென்றும்

யாரும்
நெருங்கக் கூடாதென
எழுப்பிதுதான்
இந்த அனல் வேலி

நீரூற்றிச் சோர்கிறேன்
நித்தம்.


மதியழகன் சுப்பையா, மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.