என் காதலையும்
More articles by மட்டுவில் ஞானக்குமாரன்
- ஏதெதுக்கோ செய்ததெல்லாம் ....! (10 ஜூன் 2011)
- மட்டுவில் ஞானக்குமாரன் கவிதைகள் (22 ஏப் 2010)
- நிர்வாணம் ...! (15 ஏப் 2010)
- ஒரு ஈராக்கிய கவிஞனின் சாமத்துக் கடிதம்...! (14 டிச 2009)
- தகவம் 2008ம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான விருது வழங்கும் விழா (27 அக் 2009)
கவலையையும்
சொல்லிவிட முடியாத அளவுக்குகாவல் அதிகம்
என்பதால்
என் கவிதைகள் கூட
பர்தா அணிகின்றன.....
உனது மணம்
நம்மிலிருந்து உன்னை பிரித்துவிட்டதால்
உன்னை நான்
காணமுடியாது என்பது உறுதியாகிவிட்டது.
உன் பெயரை
நான் உச்சரிக்கும் போதெல்லாம்
யானையின் பிளிறல் கேட்ட
நாகம் போலவே
நடுங்குகிறார்கள்; ....!
நெருப்பை
விழுங்கிவிட்டவளின் நிலையில்
நான்
மெல்லவும் முடியாமல் வெளியே
தள்ளவும் முடியாமல் .....
தாஜ்மகால் தகர்ந்தாலும் கூட
காதல் அழியாது...?
கவலையைப்
புனைய உதடுகள் காத்திருக்கிறது
ஆனால்
வார்த்தைகளுக்குத்தான் நடுக்கம்....
கூனிக்குறுகி
தலை கவிழ்ந்து
கை காட்டுபவனுக்கெல்லாம்
கழுத்து நீட்ட
முடியாமல்
தன்மானம் தடுக்கிறது..
இருந்த போதும்
வார்த்தைகளுக்குத்தான் நடுக்கம்
அவை
பர்தாவை அணிந்து கொள்கின்றன...
- மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.