கழுத்தைச் சுற்றிய கல்வளையம்
பிறர் கண்களுக்குத் தென்படாமலும்
Manஎனக்கும் புலப்படாமலும்
தொடர் பாரமாய்த் தொங்கியபடி ..
பால்ய நண்பர்களிடம்
பதட்டமாய் விசாரித்தேன்
மௌனத்துடன் நகர்ந்தவர்கள்
தூர தேசக் கடலில்
திரவியம் தேடுவதாகவும்
கடலாழத்தில் கல்வளையங்கள்
பாரம் தருவதில்லை என்றும்
கேட்டறிந்து கொண்டேன்
உள்ளூரில் பிழைப்பதற்கு
வித்தைகளைக் கைவிட்டு
விவசாயம் செய்தேன்
வியர்த்தேன் முதன்முதலாய்
பயிராக்கிய கரும்பிற்கு
தேடி வந்த எறும்புகள்
தேய்த்து விடக்கூடும்
கல்வளையத்தை ;
எறும்புகள் ஊறுகையில்
சமயோசித காகங்களின்
இடைத்தரகு எச்சங்கள்;
சிகிற்சை நடக்கையில்
பக்கவிளைவுகள் இயல்பு தானே
காற்றின் திசைகள் மாறினால்
காகங்களுக்குத் தெரியும்
எச்சமிடும் புதுவிடம் எதுவென்று
கரும்புச் சாகுபடியில்
விளைந்த வியர்வைகள்
நெற்றிப் பட்டையுடன்
கழுத்துக் கல்லையும்
கரைத்துக் கொண்டிருந்தன

அனுஜன்யா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It