நிசி தோறும் வெளியெங்குமலைகிறது
More articles by எம்.ரிஷான் ஷெரீப்
- ஜப்பான் பேனா நண்பி - இஸீரு சாமர சோமவீர (01 பிப் 2012)
- அரசியல் (16 மே 2011)
- ட்ரோஜனின் உரையாடலொன்று (24 பிப் 2011)
- மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...! (24 ஏப் 2010)
- விதிக்கப்பட்ட மரணம்! (23 ஏப் 2010)
ஆட்காட்டிக் குருவியினோசை
காலம் வசந்தத்தைப் பரப்பும் பொழுதில்எல்லாத் திசைகளிலும் கேட்கிறது
செங்குயிலின் இனிய பாடல்
வனாந்தர விருட்சங்களில் உருவான காற்று
சுமந்துவரும் ஒலி அதிர்வுகளோடு
சந்திக்கும் பட்டங்களை பட்சிகளை
நலம் விசாரித்தபடி அலைந்து
சேகரித்து வரும் தகவல்களையெல்லாம்
உரிய இடத்தில் கொண்டுசேர்க்கிறது
மௌனத்தையும் சிறுபுன்னகையையுமே
அதிகமாக வெளிக்கொணரும்
செவ்வதரங்களைக் கொண்டவளே
வாழ்வின் களியிசையை வர்ணித்தபடியும்
தனிமை தந்து துடைக்கும்
கண்ணீரின் துயர் அள்ளியெடுத்தபடியும்
காற்று கொணரும் எனது
குரலின் வழி அனுப்பிவைக்கும்
என்னுயிரின் மொழிபெயர்ப்பு
உன்னையும் நிரப்புகிறதுதானே
- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.