நிசி தோறும் வெளியெங்குமலைகிறது
ஆட்காட்டிக் குருவியினோசை
Loveகாலம் வசந்தத்தைப் பரப்பும் பொழுதில்
எல்லாத் திசைகளிலும் கேட்கிறது
செங்குயிலின் இனிய பாடல்
வனாந்தர விருட்சங்களில் உருவான காற்று
சுமந்துவரும் ஒலி அதிர்வுகளோடு
சந்திக்கும் பட்டங்களை பட்சிகளை
நலம் விசாரித்தபடி அலைந்து
சேகரித்து வரும் தகவல்களையெல்லாம்
உரிய இடத்தில் கொண்டுசேர்க்கிறது

மௌனத்தையும் சிறுபுன்னகையையுமே
அதிகமாக வெளிக்கொணரும்
செவ்வதரங்களைக் கொண்டவளே
வாழ்வின் களியிசையை வர்ணித்தபடியும்
தனிமை தந்து துடைக்கும்
கண்ணீரின் துயர் அள்ளியெடுத்தபடியும்
காற்று கொணரும் எனது
குரலின் வழி அனுப்பிவைக்கும்
என்னுயிரின் மொழிபெயர்ப்பு
உன்னையும் நிரப்புகிறதுதானே


எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It