விளங்காத வரிகளுக்குள்
விதைக்கின்றாய் கவிதைகளை
விளையாட்டாய் ஓடிவிட்ட
காலங்களின் மெளனராகம்

புதைத்து வைத்த உண்மைகள்
புலருகின்ற பொழுதென்று ?
புரியாத புதிர்களுக்கு விடை,

பகருகின்ற வேளை எப்போ ?
உனக்குள்ளே கேள்விகள் தோழா ...
உனைத்தானே அரிக்கின்றன
உண்மைகளின் பாரம் ஏனோ
உள்ளத்தை அமுக்கின்றன

ஈரமில்லா இதயங்களின்
காரமிகு செயல்களெல்லாம்
சாரமிகு அனுபவங்களை எமக்கு
சாராமாரியாக அள்ளித் தருகின்றன

யாருமறியாச் செய்கைகளென அவர்கள்
ரகசியமாய்ச் செய்யும் செயல்கள்
தானறியும் எதுவும் தெரியாதோ
தத்தமது மனசாட்சி அதுதான் அரசாட்சி

அகலத்தையே புலர வைக்கும்
ஆதவனின் ஒளியதனை மறைக்கும்
கருமேகம் நிலைப்பதெல்லாம்
கணநேரம் மறவாதே!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.