கடல்கடந்து வந்த இடத்திலும்
More articles by பாலசுப்ரமணியன்
- நாளை.. மீண்டும்.. (25 ஏப் 2010)
- நின்று விட்ட நேரம் (24 ஏப் 2010)
- வரைந்து அழிந்தவன் (24 ஏப் 2010)
- கண்ணீரை.. உலகமயமாக்கு.. (24 ஏப் 2010)
- அப்பாவின் முகம் (24 ஏப் 2010)
கண்ணுக்கு எட்டிய தூரத்திலும்
மனிதத் துணையில்லாத நேரம்
மனம் விட்டு பேசி, பழகிடவும்
எந்த நாட்டவன் கிடைத்தாலும்
எனக்கு மகிழ்ச்சிதான்,அதிலும்
சொந்த நாட்டானாக இருக்கவும்
சொர்க்கம் கண்ணில் தெரியும்
தென்னிந்தியனாய் அமைந்திட
தெளிவு பிறக்கும் பிறரைவிட
தமிழனாக நண்பன் கிடைத்திட
தடையிலா இன்பம் அளித்திட
தப்பித்தவறி அந்த நண்பன்
தஞ்சாவூர்காரனாகவும்,ஏன்
தெற்குவீதியை சேர்ந்தவன்
தூரத்து உறவு,சொந்தக்காரன்
என்று பலவிதமான நட்புகள்
இன்று பாலையின் நடப்புகள்
என்ன ஒரே குறை,உறவுகள்
எதுவும் உடன்பிறந்த தம்பிகள்
போல ஒருபோதும் வராது,அது
பாகப் பிரிவினை, பஞ்சாயத்து
பெற்ற தாய்க்கும் செலவழித்து
செய்த செலவை பங்குபிரித்து!