எந்தன் சதிரத்தில் நெய் உருக்கும் - இந்த
வேண்டாத இரவுகளை
விரும்பியும் விரும்பாமலும் வரவேற்கிறேன்...

மலர்கள்.. மணங்கள் மற்றும்
பழங்கள் எனப் பல ரசங்களோடும்
கத்தி கறண்டி கைவிரல்கள்
இன்னும் பலவாய் ஆயுதங்கள்
அழகழகாய் இருந்திட்டும் - என்னை
கடித்துச்சப்பி கறுமுறென்ற
கோர உணர்ச்சிகளின் துவம்சத்தால் - என்
சதிரத்தில் வட்டமாயும் நீட்சியாயும்
குறுக்கு மறுக்காய்ப் பல கீறல்கள்
பரந்த வலைப்பின்னலதுவாய்...

தேகத்தைத் தேடிவரும்
வேண்டாத இந்த இரவுகள் - இனி
சிகப்பாய் இருட்டும்...

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.