எந்தன் சதிரத்தில் நெய் உருக்கும் - இந்த
வேண்டாத இரவுகளை
விரும்பியும் விரும்பாமலும் வரவேற்கிறேன்...

மலர்கள்.. மணங்கள் மற்றும்
பழங்கள் எனப் பல ரசங்களோடும்
கத்தி கறண்டி கைவிரல்கள்
இன்னும் பலவாய் ஆயுதங்கள்
அழகழகாய் இருந்திட்டும் - என்னை
கடித்துச்சப்பி கறுமுறென்ற
கோர உணர்ச்சிகளின் துவம்சத்தால் - என்
சதிரத்தில் வட்டமாயும் நீட்சியாயும்
குறுக்கு மறுக்காய்ப் பல கீறல்கள்
பரந்த வலைப்பின்னலதுவாய்...

தேகத்தைத் தேடிவரும்
வேண்டாத இந்த இரவுகள் - இனி
சிகப்பாய் இருட்டும்...

- துறையூரான் அஸாறுடீன், இலங்கை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It