யாருமற்ற இரயில்வே
நடைபாதையின் ஒற்றைக்
குடிநீர்க் குழாயில் சொட்டும் நீரை
குடித்து விட்டு காகம் ஒன்று
தத்தித்தாவி தண்டவாளத்தின் மீது
வந்தமர்ந்தது!

 

 

ilavattam_track_55தலையை இடமும் வலமுமாய்
சாய்த்து தண்டவாளத்தின்
பளபளப்புக்கான காரணங்களை
அது பட்டியலிட முனைந்தது!

 

 

பயணம் செய்த பலரது
பாதம் பட்டதினாலா?
அல்லது
சதைத்துணுக்குகளில்
குருதி ஊற்றி பிடிக்கப்பட்ட
சாணத்தினாலா?
அல்லது ....

 

 

பட்டியலை முடிக்கும் முன்னரே
விபரீதம் ஒன்று அதன்
கண்களில் குடியேறத்
துவங்கியிருந்தது!

 

 

திடமாய் இருங்கள்
எக்கணமும் நிகழலாம்
மீண்டுமோர் தற்கொலை!

 

- இளவட்டம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It