கரையேற்றப்பட்ட

அந்த கட்டுமரத்தின் நிழலில்

durai_lonemanகரையத் தொடங்கிய மௌனங்கள்...

 

உனது காதலை

நீ சொல்லி முடித்தாகி விட்டது..

 

அலைகள் நீ

கரையென நான்..

தீர்ந்த நுரைகளில்

எதை விட்டுச்செல்கிறோமென விடைபெறுகிறோம்!

 

இரவின்

விழுங்க முடியா பசியோடு

இழுத்து போர்த்திய போர்வைக்குள்

அவள்

கொட்டிய வார்த்தைகளும்

காட்டிய உணர்வுகளுமாய்.....

 

ஐம்புலன்களை

காதல் செய்ய முயற்சிக்கும்

ஒரு வினோத இரவு!

 

வசமாய் சிக்கிய கைதியாய்

தலைமாட்டிலிருந்த தலையணை

நைசாய் நழுவி

 

அவள் இடத்தை நிறைவு செய்கிறது!!!

 

- துரை @ சதிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by துரை @ சதிஷ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.