கோவிலில் கடவுளைப்
பார்த்த கணம் —
என்ன வேண்டுவதென்றே தெரியவில்லை.

மனதிற்குப் பிடித்தவளை
கனவில் சந்தித்த கணம் —
என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

பழைய நண்பனின் குரலை
அலைபேசியில் கேட்ட கணம் —
என்ன உரையாடுவதென்றே தெரியவில்லை.

என்ன செய்வதென்றறியா கணத்தில் தானே
எல்லாமே முழுமையடைகின்றன.

- அ.சீனிவாசன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.