More articles by இளங்கோ
- கல்வி - வினவுவோம் (17 ஜூலை 2015)
- பறத்தலின் சிறகை அறிமுகப்படுத்தியவன் (25 ஏப் 2014)
- யாருமற்ற என் அறை.. (23 ஏப் 2014)
- தொட்டிச் செடி (02 ஜன 2014)
- நீர்மைப் பொழுதின் குரல் பூக்கள் (24 டிச 2013)
உருகும் சொற்களின் வார்ப்பென
உலோகச் சுருள் இழைகள்
கூர் ஓரங்களைக் கொண்டு
கவனப் பிசகாகி
எழுதும்
விரல் ரேகையைக் கிழிக்கக் கூடும்
கவிதைப் பட்டறையில்
கனன்று கொதிக்கும்
உருக்கு நெருப்பின் துருத்தியொன்று
சுவாசமென
விம்மிப் புடைக்கிறது
ஒவ்வொரு முறை
மையத்தை விளிம்பு நோக்கி நகர்த்தும்போது!
****
- இளங்கோ (