எங்கிருந்தோ வீதி
நுழைந்த பூனை
சுற்றி சுற்றி பார்த்து விட்டு
மீண்டும் எங்கேயோ
நுழைந்து கொண்டது
பலத்த காற்று

இப்போது பூனை விடுத்து
வீதியில் அல்லாடும்
இலையொன்றை நான்
பின் தொடர்கிறேன்
பலத்த காற்று
மெல்ல பூனையிலிருந்து
இலையாகிக்
கொண்டிருக்கிறது

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.