உங்களுக்கு முன்பாகவும்
சில ராஜ விசுவாசிகள்
புகழ் மொழிகளை
வேய்ங்குழல் கொண்டு
இசைத்தபடியே இருந்தார்கள்.
இன்று அவர்களையும்
ஒரு முறை
பார்த்து விடுங்கள்.
பிறகு சாவகாசமாக
கூழைக் கும்பிடுக்கான
புகழ் மொழிகளை
இரவு முழுவதும்
விழித்திருந்து தயாரியுங்கள்.

- ப. சுடலைமணி, திருநெல்வேலி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.