அன்று ரத்தப் பிசுபிசுப்போடு
இருந்த சிலுவையை
கழுவாமல் விட்டதால்
என்னவோ இன்னுமும்
நவீன பிலாத்துகள்
ரத்தம் சொட்டும்
சிலுவையை சுவைக்கிறார்கள்
சிலுவை தேய்ந்து கொண்டிருக்கிறது.
இதோ தேய்ந்த சிலுவவையில்
அறையப் படுகிறான்
தினந்தோறும் ஒருவன்.

- ப.தனஞ்ஜெயன்

 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.