நிறைவேறாத
தன் கனவுகளை
ஊன்றிக் காத்திருக்கிறான்
நீண்ட நாட்களாய்
தன் கனவு மரங்களில்
அமர்ந்த பறவைகளை
கல்லெறிந்து
துரத்தி
தனக்கான கனவுகளை
அந்தப் பறவையோடு
கடத்தி பறக்க விடுகிறான்
மீண்டும் அதே இறகுடன்
கூடு திரும்பும் பறவை
கனவுச் சிறகுகளை
உதிர்க்கிறது

- ப.தனஞ்ஜெயன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.