potஏற்கனவே நிரம்பி
ஊற்றெனவே வழியும்
மனமொன்று என்னிடம்
இருக்கிறது..

இன்னும் ஒன்றை
இனிப்பாய் இருந்தாலும்
நிராகரித்துச் செல்கிறது..

ஆயுள் கூட்டி
ஆகாச மீன்களின் ஒளிர்வாய்
அஃதிருக்க
இந்நிறைவு போதுமானது!

யார் கண்ணும்
யாவோரிடத்தும்
பட்டுவிடல் ஆகாது!

பாயட்டும் இயல்பாய்!

- பவானி ரெகு

Pin It