ஏற்கனவே நிரம்பி
ஊற்றெனவே வழியும்
மனமொன்று என்னிடம்
இருக்கிறது..
இன்னும் ஒன்றை
இனிப்பாய் இருந்தாலும்
நிராகரித்துச் செல்கிறது..
ஆயுள் கூட்டி
ஆகாச மீன்களின் ஒளிர்வாய்
அஃதிருக்க
இந்நிறைவு போதுமானது!
யார் கண்ணும்
யாவோரிடத்தும்
பட்டுவிடல் ஆகாது!
பாயட்டும் இயல்பாய்!
- பவானி ரெகு