பரந்த இந்த தேசத்தில்
எல்லோருக்கும்
நான் வேராக இருக்கவே
பேராவல் கொண்டு
முயன்று வருகிறேன்.
எனினும்,
சிலர் என்னை படர் கிளையெனவும்,
விழுதாகவும்,
பசுந்தளிர் பரவும் கொடியாகவும்,
இளம் பிஞ்சாகவும்,
நறுமலராகவும் ,
கனியாகவும்,
கனியுதிர் விதையாகவும்,
ஆகாயத்தை மறைத்துப் பந்தலிடும்
குடை மரமாகவும்,
பழுத்த இலையெனவும்
ஏன் காய்ந்து மக்கிடும்
சருகாகவும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால்
நான் வேராக இருக்கவே ஆசைப்படுகிறேன்.
வேறாக அல்ல…
- முனைவர் சி.திருவேங்கடம், இணைப் பேராசிரியர், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- சி.திருவேங்கடம்
- பிரிவு: கவிதைகள்