சனிக் கிழமைகள் எப்போதும் பாரம் கொண்டவையாக இருக்கின்றன
ஞாயிறுகளின் களிப்பை
கொண்டாட தேங்கிய பணி-
களை விரைந்து முடிப்பதற்காக ஏற்றிய பாரம்
ஞாயிறுகள் எப்போதும் மின்னலென மின்னி மறைகிறது
தடுமாற்றத்துடனே திங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
செவ்வாய் எப்போதும் மந்தமாகவே நகர்கிறது
புதன் கடமைகளுக்குள் நம்மை மூழ்கடிக்கிறது
வியாழனும், வெள்ளியும் அதே நிலையை நீட்டிப்பு செய்கிறது
இதோ சுழற்சியான நாட்களின் நகர்வில் மீண்டும்
பாரம் ஏறிய சனிக் கிழமை......

- பா.புருஷோத்தமன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.