பெருநகரப் புகைவெளியில்
நம்மை நகர்த்திச் செல்லும் எரிபொருளாய்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின்
சிறுபுன்னகை
நம்மேல் கவியும் கரிப்புகை
துடைத்தெறிந்து
சட்டைப்பையில் கிடக்கும்
தேன்மிட்டாயென
சுவை கூட்டி கழிகிறது
கொடுங்கானல் வாழ்வு

- சதீஷ் குமரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.