நனைந்த கூரை
கசிந்து கொண்டிருக்கிறது
புகை !

கோடைமழைக்குப் பின்
தரிசு நிலத்தில் வளரத் துவங்குகிறது
கரையான் புற்று !

மேகம் விலக
குளத்தில் பூக்கின்றன
விண்மீன்கள் !

வேரடி மண்ணை
மரமேற வைக்கிறது
பசித்த கரையான்!

- மகிழ்நன் மறைக்காடு

More articles by மகிழ்நன் மறைக்காடு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.