அத்துமீறும் அன்பின்
அத்தியாயங்களில்
திசையெங்கும் அமுதயட்சி!
உன் ஒரு பார்வைக்கும்
இன்னொரு பார்வைக்கும்
இடையிலானது என்
நேசத்தின் இளைப்பாறல்கள்!
செல்லாத ஞாபகங்களை
சொல்லாமல் தொலைத்தபின்
நிறைவோடு தொடர்பற்று கிடைப்பதெல்லாம்
நேர்நிலை விசித்திரம்!
கண்கொண்ட தூரம்வரை
வரை உன் காட்சி பிழைகள்
இனி மெல்ல சாகும் வரம்
ஒன்றும் கிடைக்கப்பெறலாம்!
வாழ்வின் நிகழ்தகவுகள்
மொத்தமாய் உன்
தூரம் வரை தான்!

ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.