வட்டமிடும்
வல்லூறுகளின்
விழிகளில்
விழுந்திடாமல்
கானகம் உதிர்க்கும்
துயரக் கானங்களில்
கரைந்திடாமல்
இன்றைய
இரை தேடி
ஆகாயம் அளந்து
அலுத்து, களைத்து
கூடு திரும்பும்
ஒற்றைப் பறவை
அனைத்தும் மறந்து
சற்றே
ஆசுவாசமடைகிறது
தன்னைக் கண்டதும்
கூக்குரலிட்ட
குஞ்சுகளின்
அரவணைப்பில் ...
ஒற்றைப் பறவை
- விவரங்கள்
- அருணா சுப்ரமணியன்
- பிரிவு: கவிதைகள்
More articles by அருணா சுப்ரமணியன்
- மீள்பதிவு (04 ஏப் 2020)
- மௌனங்களின் காலத்தில்! (11 மார் 2020)
- கதவு (03 அக் 2019)
- நாட்களின் துண்டுகள் (27 செப் 2019)
- கதவுகளும் சாவிகளும்... (12 ஆக 2019)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.