நான் எழுத்துக்களை

கோர்த்துக் கொண்டிருந்தேன்.

அவளோ வார்த்தைகளில்

விளையாடிக்கொண்டிருந்தாள்.

நான் வார்த்தைகளை

பழகியபோது

அவள் விடுகதை சொன்னாள்

.

நான் விடை தேடிக்கொண்டிருக்கும்போது

தொலைந்தது வாழ்க்கை.

 

-பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It