அருங்கொடையின் நிறைமாதம்
மண் வியர்க்க
புழுதி பறந்த பொழுதில்
கால்நடையாகி பசிவயிறுடன்
களைத்துத் திரும்புகின்றன
தொழுவத்திற்கு மந்தைகள்
தக்க காப்பின்றி
பூஞ்சணம்படிய
குலைந்திருக்கும்
வைக்கோல்போரிலிருந்து
எழுகிற நாற்ற வாடை
மந்தைகளின் பசியை
நாசிக்குள் குமட்டலாய்
அசைபோட வைக்கிறது
மேய்ச்சல்தரை
எழுத்து மங்க வாசிக்க முடியா
வெற்றுக்காகிதமாய்
பசும்புல் கனவில் மிதந்தலைந்து
திரும்பும் கணம்
கணுவுக்கு நகர்த்த
ஈமொய்க்கும் கன்றின் விழிகாண
தாய்மைக்குள் சுரக்கிறது இரக்கம்
சீர்கேட்டில் விசாரிக்கும்
இடையன் குறி
பால்பூத்த காம்புகளில்
தொக்கி நிற்க
நுரைத்தெழும் செம்புகளுக்காக
அலையும் மனம்
திருகுதாளமாய்
காற்றில் விடுகிறான்
இடைக்காலப் பாடலொன்றை
தன்பசியே பெரிதென்றெண்ணி
தடவியபடி தேடுகின்றன விரல்கள்
அடி மண்டிக்காக எச்சில் சுரக்க
கன்றின் பசி கண்களில் இறங்குகிறது
இறுக சுருக்கும் வடமென!
- ரோஷான் ஏ.ஜிப்ரி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- ரோஷான் ஏ ஜிப்ரி
- பிரிவு: கவிதைகள்