lady rainநிமிர்ந்து நிற்கும்
ஒரே
வானவில்
நீ

வண்ண வண்ண
ஆடையில்
கருப்பு வெள்ளை
படமாக
கனவில் வந்து போகிறாய்

இது என்ன
துவைக்கமாலே
அலசுகிறாய்
மழையில் நீ

சாயம் போகாத
உன் ஆடையும்
எவ்வளவு துவைத்தாலும்
நிறம்மாறாத என் கனவுகளும்
விடியும் வரை
நனைந்து கொண்டே
இருக்கிறது
என் கவிதையில்...!

Pin It