எரியும் பிணவாடையோடு
மேல்விழுகின்றன சொற்கள்
நாசியில் ஊர்ந்தேறி
சுவாசத்தில் பரவுகிறது
சுடுகாடு

விரைத்தெழுந்து
வீழ்கிறது
இருதயம்

விழிகளில்
தீனமாய்
வழிகிறது
உப்புக்கரிக்கும் குருதி

குளிர்காலத்தின் வருகையை
இசைத்தபடி
கடக்கிறது காற்று

சட்டை செய்வதாயில்லை
உள்ளுறை வெப்பத்தில்
சிவக்கும் என் பாடல்

- க.உதயகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.