சடசடவென பொழிகிறது
மழை

ஆங்கோர் மரத்தில் கூடிகட்டி வாழும்
ஊர்க்குருவியைப் பற்றி
மழைக்கு எந்த லட்சியமும் இல்லை

அடித்து வீசுகிறது
காற்று

மெல்லிய மல்லிக்கொடி
ஒடிந்துவீழ்வது பற்றி
காற்றுக்கென்ன விசனமிருக்கப்போகிறது..?

எது ஒன்றும்
அதன் அதன்
தன்னியல்பிலேயே இருக்கிறது

யாரை குறை சொல்ல முடியும்?
வேண்டாம்
யாரையும் குறை சொல்ல வேண்டாம்

இதோ என் கூட்டின்
மரக்கதவுகளை
கூர் மூக்கால்
சுரண்டிக்கொண்டிருக்கும்
அந்தப் பறவைக்கு
யாரேனும் சொல்லுங்களேன்
கதவை மூடிக்கொண்டு
அழுவது என்னியல்பென

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.