வரப்பு வெட்டி கலப்பப் புடிச்ச
படிக்காத பாவி மக்க நாங்க
வெதைக்க வச்ச வெதநெல்லும்
வெந்தப்பொறவு வெதைக்க
நெல்லுமில்ல - செரிக்கச் சோறுமில்ல
ஆத்துத்தண்ணியும் வரக்காணும்
ஏச்சுப்புட்ட வானத்தயும் வெறிச்சுப்பாக்கக்
காத்துக்கிடக்கோம் பாவப்பட்டு
ரெண்டுத் தூத்த விழுவாதானு ..
உப்புத்தண்ணில நெல்லு முளைச்சா
முப்போகம் வெளஞ்சு போகும்
மிச்சமிருக்கக் கண்ணுத்தண்ணியில..
கண்ணீர் தேசம்
- விவரங்கள்
- இளம்பரிதி கல்யாணகுமார்
- பிரிவு: கவிதைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.