சாணத்தின் மணம் நீளும்
ஒரு விடியா விடியலின் வாசலில்
மா நிறைந்த கைகளுடன் நிற்கிறேன்...

மூடுபனியின் இறுக்கத்தில் நனையும் மௌனத்தை
இலகுவாய் உரசிச் செல்கிறது,
இடைவிடாது ஒலித்த
பால்காரச் சிறுமியின் வளையோசை..

மீள்மூச்சுடன் தட்டிக் கொண்டிருந்த
சிறுமிக்கு எள்ளளவும் செவிசாய்த்ததாய்
தெரியவில்லை,
இருள் மூகமூடியணியாத எதிர்வீட்டு மரக்கதவு..

நிமிடத்தின் தொடர்ச்சியிலும்
திறவாத கதவுகளின்
பெருங்கோப்பை அளவிலான அகாலத்தை
நொசிவிழைக் கயிற்றின் நெடி
அரவமற்று கதைத்துக் கொண்டிருக்கிறது..

விடியும் விடியலின் ஓரத்தில்
ஒரிரு புள்ளிகளுக்குள் அடங்கி விடுகிறது
இழுக்க நினைத்த மாக்கோடுகள்..

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.