சப்தங்களின் நுரைவடிந்து
கரை ஒதுங்கிய சொற்கள்
இறந்து கிடக்கின்றன
நீ ஏதும் பேசாத
இவ்வேளையில்

மணியோசை கேட்காத
கோயிலைப் போல
ஒலியிழந்து கிடக்கிறது
என் அலைபேசி
உன் அன்பை பேசாமல்..!

பிரிவை வலியுறுத்தி..
நீ பேசிய சொற்களில் எல்லாம்
உன் பிரியங்களே
வழிந்து கிடந்தன..!

அதிகாரம் என்பது
அன்புக்கு எதிரானது
நீ செய்யும் அதிகாரம்
அன்பைப் போல் சுகமானது..!

உறவைப்
பிரார்த்தனை செய்து கொண்டே
பிரிவில் விழுந்தவள் நீ..!

பிரிவை
பிரார்த்தனை செய்து கொண்டே
உறவில் கலந்தவன் நான்..!

- அமீர் அப்பாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.