வெறித்து நிற்கும் சாலையின்
இருபுறமும் சோடியம் விளக்குகள்
உதிர்க்கும் இளமஞ்சள் மழை....
அவை நனைக்கும்
மின்கம்பிகளின் இடையில் ஊர்ந்தேறுகின்றது
சொற்பமாய் தொக்கி நிற்கும்
கருநிற இருள்வலை..
எழுத்து சாளரங்கள் வழியே
சாலையின் தனிமையை
அலசியுதிர்த்து உட்கொள்ள இயலாமல்
உயிர்ப்பையும் இறப்பையும்
பின்னியெடுக்க ஆரம்பித்திருந்தன
கனவுகளில் அயன்றிருந்த விழிகளும் செவிகளும்..
இப்பெருநகர மௌனத்தைக்
கலைக்க மெலிந்துணரப்படும்
ஆலையின் இரைச்சல் மொழியோடு
இறப்பினை மீறிய அணுக்களின்
மௌனக்காகிதத்தில் நிறைவுற்றிருந்தது
துயிலா இரவென்று ஒன்று..
- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- தேனப்பன்
- பிரிவு: கவிதைகள்