வெறித்து நிற்கும் சாலையின்
இருபுறமும் சோடியம் விளக்குகள்
உதிர்க்கும் இளமஞ்சள் மழை....
அவை நனைக்கும்
மின்கம்பிகளின் இடையில் ஊர்ந்தேறுகின்றது
சொற்பமாய் தொக்கி நிற்கும்
கருநிற இருள்வலை..
எழுத்து சாளரங்கள் வழியே
சாலையின் தனிமையை
அலசியுதிர்த்து உட்கொள்ள இயலாமல்
உயிர்ப்பையும் இறப்பையும்
பின்னியெடுக்க ஆரம்பித்திருந்தன
கனவுகளில் அயன்றிருந்த விழிகளும் செவிகளும்..
இப்பெருநகர மௌனத்தைக்
கலைக்க மெலிந்துணரப்படும்
ஆலையின் இரைச்சல் மொழியோடு
இறப்பினை மீறிய அணுக்களின்
மௌனக்காகிதத்தில் நிறைவுற்றிருந்தது
துயிலா இரவென்று ஒன்று..
- தேனப்பன் [
தொடர்புடைய படைப்புகள்
பெருநகர இரவின் ஓர் காகிதம்
More articles by தேனப்பன்
- நான் முழுக்க நீ.. நீ.. நீ.. (18 பிப் 2015)
- யாருமற்ற க்ரீச் க்ரீச் ஒலியின் அடர்த்தி (26 ஜன 2015)
- கனவுகளின் கிழிந்த ஒற்றை சிறகு (08 ஜன 2015)
- பயணிக்கும் காற்புள்ளிகளின் உருவமற்ற கூட்டுச்சொல் (05 ஜன 2015)
- நினைவுகளின் கூர்மையில் பகிராது நீர்த்த வன்மம் (31 டிச 2014)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.