pathஇன்னும் ஈரமாய்த்தான் இருக்கிறது, அது!

இரக்கமே இல்லாத வண்டிச் சாரதி

அடித்துச் சாய்த்துவிட்டு

அரவமின்றிப் போய்விட்ட நாழிகையில்

உயிர் கசிந்து தெருவில் ஒழுகியோடிய

அணில் குஞ்சொன்றின் சடலம்

அகற்றப்பட்டும் எஞ்சியிருக்கும்

குருதியின் தடம்போல

இதயத்துள் இன்னும் மிச்சமிருக்கின்றன

நினைவுகளின் சுவடுகள்...

- லறீனா அப்துல் ஹக் (இலங்கை)

More articles by லறீனா அப்துல் ஹக்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.