பிரியங்கள் புனைந்து
சுமந்த கருக்கள்-அவைகளின்
கனவு விருட்சங்களில்
பிரியங்களின் வர்ணத்தை
தூரிகையில் துளைத்தெடுத்து
தங்களின் அடையாளத்தை
தேடிக்கொள்கின்றன.
வர்ணங்களின் பேதமை
அறியாத பிரியங்கள்
இன்னபிற கருக்களையும்
அவ்வாறே சுமப்பதில்
தங்களுக்கான வர்ணத்தின்
செறிவு பற்றி வினவ
ஆரம்பிக்கின்றன கருக்கள்.
வினவுகளின் ஆழம்
புரியாத பிரியங்களின்
வெற்றுப் பதில்களில்
தங்களுக்கான தடித்தத்
தோல்களை அறுத்தெறிந்து
இரத்தவழிதலில்
கருக்கள் தேடி அலைகின்றன
புது வர்ணங்களை.
- சோமா (
கருக்களின் வர்ணம் தேடுதல்
More articles by சோமா
- சுதந்திர தின ஆஃபர் - ஷாப்பிங் மால்கள் (15 ஆக 2012)
- எழுதப்படாத கவிதை (27 ஜூலை 2012)
- எதையும் மிஞ்சவிடாது உலகமயமாக்கல் (23 ஜூலை 2012)
- ஒரு புத்தன் ஜனிக்கட்டும் (05 மே 2012)
- நேற்றைய குண்டுகள் (24 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.