பிரியங்கள் புனைந்து
சுமந்த கருக்கள்-அவைகளின்
கனவு விருட்சங்களில்
பிரியங்களின் வர்ணத்தை
தூரிகையில் துளைத்தெடுத்து
தங்களின் அடையாளத்தை
தேடிக்கொள்கின்றன.
வர்ணங்களின் பேதமை
அறியாத பிரியங்கள்
இன்னபிற கருக்களையும்
அவ்வாறே சுமப்பதில்
தங்களுக்கான வர்ணத்தின்
செறிவு பற்றி வினவ
ஆரம்பிக்கின்றன கருக்கள்.
வினவுகளின் ஆழம்
புரியாத பிரியங்களின்
வெற்றுப் பதில்களில்
தங்களுக்கான தடித்தத்
தோல்களை அறுத்தெறிந்து
இரத்தவழிதலில்
கருக்கள் தேடி அலைகின்றன
புது வர்ணங்களை.
- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- “நான் எரிந்து விழுந்த ராக்கெட்”
- கொளத்தூர் மணி பிறந்தநாளையொட்டி உடற்கொடை வழங்கும் தோழர்கள்
- பள்ளிகளில் ஜாதி மோதல்களைத் தவிர்க்க வழி
- தோல்வி ஆனால் நன்மைக்கே
- பெரியார் முழக்கம் ஜூன் 27, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழ்ப் பொதுவெளிக்கு தாராபுரம் தந்த அறிவுக்கொடை எஸ்.வி.ராஜதுரை
- மகேந்திரவர்மன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்
- தென்கிழக்காசியாவின் வரலாற்றாசிரியர் ஆர்.ஏ.எல்.எச்.குணவர்த்தனா (1938-2010)
- விவரங்கள்
- சோமா
- பிரிவு: கவிதைகள்