கல்யாண வீடுகளில்

யாரும் யாருடனும்

பேசிக் கொண்டிருக்க

நேரமிருப்பதில்லை.

அறுந்து அறுந்து

தொங்கும் உரையாடல்களில்

நிறைவில்லை.

இழவு வீடுகள்

அனைவருக்கும்

சுகமானவை.

யாரிடமும் பேச முடியாமல்

கிடத்தப்பட்டிருப்பவனைத் தவிர.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.