ஆடு மேச்சுவரும்
அசூரு மேட்டுவழி
கூடி விளையாண்ட
கோணங்கி கொள்ளையில...
கொய்யாபழம் திருடயில
கோனேரி கிழவன்கிட்ட
மாட்டிவிட்டு போனவளே
மனசுக்குல பூத்தவளே...
சின்னு பாறைகளும்
சீமை கருவமுள்ளும்
நீ சிரிச்ச வலிக்கலையே
பூ விரிச்ச மலர்விழியே...
பொடிநடைய நீ நடக்க
புங்கமர நிழலாட்டம்
அனல்காற்று அடிச்சாலும்
அடிமனசு குளிரும்புள்ள
கருவா குறிச்சியில
உறவா பிறந்தவளே
ஒருநா பிரிந்தாலும்
இருவிழிதான் உறங்காதே...
ஐயனார் கோவிலுக்கு
அனுதினமும் வரதெல்லாம்...
அன்னக்கிளி உன்அழகை
அணுஅணுவாய் ரசித்திடத்தான்....
கோடாரி கண்ணழகி
கொளுசுபோட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உலுக்கி எடுத்தது யாருமில்ல...
ஆத்தங் கரையோரம்
காத்திருக்கும் என்மனசு
ஒத்த வார்த்தையில
என்உசுரு பூத்திருக்கு..
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- துஷ்பிரயோகமெனும் துண்டித்தலும் ஊமையான ஒலிவாங்கிகளும்
- வடிவமற்ற சர்ப்பம்
- சத்தியமூர்த்தியின் தற்கால ஞானோதயம்
- தனிச்சட்டமே தீர்வு!
- அரசின் அலட்சியமே கள்ளக்குறிச்சி மரணங்கள்
- விவரங்கள்
- நல்லான்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post