ஆடு மேச்சுவரும்
அசூரு மேட்டுவழி
கூடி விளையாண்ட
கோணங்கி கொள்ளையில...
கொய்யாபழம் திருடயில
கோனேரி கிழவன்கிட்ட
மாட்டிவிட்டு போனவளே
மனசுக்குல பூத்தவளே...
சின்னு பாறைகளும்
சீமை கருவமுள்ளும்
நீ சிரிச்ச வலிக்கலையே
பூ விரிச்ச மலர்விழியே...
பொடிநடைய நீ நடக்க
புங்கமர நிழலாட்டம்
அனல்காற்று அடிச்சாலும்
அடிமனசு குளிரும்புள்ள
கருவா குறிச்சியில
உறவா பிறந்தவளே
ஒருநா பிரிந்தாலும்
இருவிழிதான் உறங்காதே...
ஐயனார் கோவிலுக்கு
அனுதினமும் வரதெல்லாம்...
அன்னக்கிளி உன்அழகை
அணுஅணுவாய் ரசித்திடத்தான்....
கோடாரி கண்ணழகி
கொளுசுபோட்ட உலகழகி
உன்னவிட என்மனச
உலுக்கி எடுத்தது யாருமில்ல...
ஆத்தங் கரையோரம்
காத்திருக்கும் என்மனசு
ஒத்த வார்த்தையில
என்உசுரு பூத்திருக்கு..
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- விவரங்கள்
- நல்லான்
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post