கடல்களுக்கு அப்பால்
ஒரு சிறு ஓடையின் ஓரமாக
அறுவடை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது
ஒரு தலை...
கழுத்தின் வழி வழிந்த
உதிரம்
ஓடை நீர் கலந்து
பாய்ந்தோடி நீர் பாய்ச்சிய
தோட்டத்து ரோஜா
சிவந்து பூத்திருக்க...
அதன் இதழ் தேன் உறிந்து முடித்து
நாணி சிவந்து  
சில வண்ணத் துகள்களை தூவிவிட்டு
பறந்து சென்றது
ஒன்றுமறியா வண்ணத்துபூச்சி...
Pin It