லெனினை வாங்கியாகிவிட்டது,
சே' ஏற்கனவே
பிராண்ட் நேமில் இருக்கிறார்,
காந்தியை உருவாக்கியவர்களே
அவரைக் கொன்று விட்டனர்,
சதாமை தூக்கிலிட்டு அழித்தாயிற்று,
கடாஃபிக்கெதிராக சிலுவைப்போர்
நடந்து கொண்டிருக்கிறது,
லேடனைக் கண்டுபிடித்துவிடலாம்,
---
ஜூலியன் அஸாஞ்சே' வை
மட்டும் என்ன செய்வது
என்றுதான் தெரியவில்லை...!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.