தாள்கள் ஒவ்வொன்றாய்
நிரப்பப்படுகையில்
அழும் வார்த்தைகளின் விசும்பல்கள்
இரவுகளில் மட்டுமே
சில சுற்றுகள் பெருகக்கூடும்..

நனையும் கையேடிற்கான
ஆறுதல் மொழி
மௌனம்தான்
என்பதில் மிச்சப்பட்டு
மெலிதாய் இழைகிறது
எனது எழுதுகோல் சாயம்...
 
பிரிவின் வீச்சத்தில்
தெறித்து விழும் புன்னகை,
ஓர் நூற்றாண்டு சோகத்தை
 உள்ளடக்கிய வரிகள்,
கண்ட நொடியில் விளங்கிடாது
அவற்றின் வீரியம்..
 
விளங்கும் வேளையில்
தனிமை குளவிகள்
கொட்ட கொட்ட
ஏற்றுகிறேன் உணர்வுகளை
அதற்கென அலங்கரிக்கப்பட்டதோர்
தற்கொலை விளிம்பினில்...

- தேனப்பன் [இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.]

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.