இருண்டவெளி நர்த்தனம்
நிதம் அரங்கேற்றும்
பின்னிரவினை அடக்க
வழிகள் அறியாதாம்
முன்னிரவு...
.
கடலும் கரையும்
சிலாகிக்கும் அச்சில நொடிகள்
நமக்குள்ளேயும்
நடந்தேறும் மர்ம முடிச்சுகள்
சற்று யதார்த்தத்திற்கு
மீறியவைதான்!!
.
மூன்றாம்பிறை நாற்காலியில்
அமர்ந்து
ஒவ்வொரு மணித்துளியிலும்
இருளின் அரங்கேற்றவேளையினைத்
துழாவித் துழாவித்
தோற்றெழுகிறோம்...

வா! வா!
புரிந்து வகுப்போம்
ஓர் மெல்லிய ஊடகம்...
.
கடல் - கரை - நிலவு
நீ - நான் - இரவு...
மத்தியில் நம்மோடு
இழைந்துருளும் காதல்...
 
- தேனப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It