கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பரந்தூர் மக்கள் அகதியாவதா தீர்வு?
- பாவிகள்
- நினைவு
- நீயென் ஆதூரன்
- குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
- சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்கத் துப்பில்லாத திமுக அரசு
- அப்பட்டமாக வெளிப்பட்ட நடிகர் விஜய்யின் கோர முகம்! ஆர்எஸ்எஸ் பிஜேபியை விஞ்சிய தவெக!!
- தொல்லியல் அறிஞர் வி.கார்டன் சைல்ட் (1892-1957)
- சித்தாவுக்கு முன்பாகவே இராவணன் உருவாக்கிய சிந்தாமணி மருத்துவம்
- மாஞ்சோலை தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டம்
- விவரங்கள்
- இவள் பாரதி
- பிரிவு: கவிதைகள்
நிகழாத உன் வருகை
மென்மையான
எனது கனவுகளுக்கு
ஒரு வன்மத்தை
நிகழ்த்திவிடக் கூடிய
பாய்ச்சலுடன் நெருங்குகிறாய்
உன் வன்மமான கனவுகளை
அழித்தெடுப்பதற்காய்
நெருங்குகிறேன் உன்னை
மென்மையிலும் மென்மையாக..
====
நீயும் நானும்
நடந்த பயணங்களில்
வலை பின்னிய காதலில்
இப்போது நான்மட்டும் ..
கீழிறங்கி நிற்கும் உன்னை
மேலிழுக்க கை நீட்டியபடி...
====
யாரும் பார்த்துவிடாதபடிக்கு
மூடியிட்டு வைத்திருக்கும்
உன் நேசத்தை
மோப்பம் பிடித்துவிட்டதால்
திரும்பிப் போக மறுக்கிறது
என் சுயம்...
=====
நீ அள்ளித் தெளிக்கும்
காயங்களைப் பத்திரப்படுத்துகிறேன்..
நான் பத்திரப்படுத்திய எதுவும்
என்னிடம் நிலைப்பதில்லை..
உன்னை இன்னும் பத்திரப்படுத்தாததன்
காரணமும் இதுவே...
====
தனித்த வாகனத்தில் வலம் வந்த
அடர் இரவொன்றில்
என் வாகனத்தில் ஏறி
விளையாடிய உன்னை
இறக்கிவிடாமல்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்
கடலின் கீழும்
வானிற்கு மேலும்
====
உனது எந்த வார்த்தையும்
துளையிட இயலாது
ஆதி மௌனத்தால்
கவசமுற்றிருக்கும் என்னை
====
ஏதுமற்ற தருணங்களில்
எல்லாமுமாய் நீயிருக்கிறாய்..
எல்லாமுமாய் நீயான போது
ஏதுமற்றிருக்கிறேன்
====
நிகழாத உன் வருகையிலும்
அலங்கரிக்கப்படுகின்றன
என் இரவுகள்
உன் முந்தைய நிகழ்த்துதலால்...
=====
உன் தேவைகள் அனைத்தும்
தீர்ந்த பின்னும்
மீதமிருக்கும்
என் காதலின் தேவைகள்...
RSS feed for comments to this post