மாற்றுத் திறனாளிகள் கொண்டாடினர்
கடவுளென்று அவனை
தம் துயரங்களை
விருதுக்குரிய வெற்றிப் படமாக்கி
உலகறியப் பதிந்ததற்காக!
அவன் தலைக்குப் பின்
சுழலத் தொடங்கியிருந்த
ஒளிவட்டத்தை நெருங்க முடியாமல்
விழுந்து மடிந்து கொண்டிருந்தன
விட்டில் பூச்சிகளாய்..
படமெங்கும்
தத்ரூபமாய் நடித்து ஒத்துழைத்த
மாற்றுத் திறனாளிகள்
சம்பள பாக்கி கோரி
அனுப்பிக் கொண்டிருந்த
விண்ணப்பங்கள்!
RSS feed for comments to this post