அலைகுடிகளாக வாழ்ந்த மனிதர்கள் பல பரிமாணங்களைக் கடந்து இனக்குழு வாழ்க்கைக்குத் தங்களை தயார்செய்து கொள்ளும்போது தான் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை வழக்காறுகளாக நிகழ்த்தத் தலைப்பட்டார்கள். வேட்டைச் சமூகமாய் இருந்தபோது பெற்ற பொருட்களை சமமாக பாதீடு (பகிர்ந்து இடு என பொருள்படும். இதுபற்றி தமிழ் இலக்கண மரபில் உள்ளது) செய்ததுபோல் தங்களது அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டதன் விளைவால் வழக்காறுகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு இனக்குழு சமூகமும், உற்பத்தியில் ஈடுபட்டு பொருளீட்ட முற்படும்போது அதன்சார்ந்த சடங்குகள் உருவாயின. ஓர் இனக்குழு சமூகத்தில் உருவான சடங்கு நிலவியல் எல்லை கடந்தும் பரவியது. இவ்வாறு சடங்காய் நிகழ்த்தப்பட்ட வழக்காறே பொங்கல் விழாவாகும். காலப்போக்கில் சடங்கிலிருந்து விலகி நிறுவனப்படுத்தப்பட்டு விழாவாக இன்றளவிலும் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர்.
எந்தவொரு சமூகம் தொன்மைச் சமூகமாக இருக்கிறதோ, அச்சமூகம் பல்வேறுபட்ட பண்பாட்டு அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக வாய்மொழி வழக்காறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்காறுகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உற்பத்தியில் ஈடுபடும் போதும், வழக்காறுகளை நிகழ்த்தும்போதும் மகிழ்தல், அறிவூட்டல் எனும் நிலை உருவாகின்றது. உற்பத்தி மூலம் உபரி கிடைப்பது போல் அதன் மூலம் சடங்குகளும், விழாக்களும், நிகழ்த்துக்கலைகளும் கிடைக்கின்றன. அந்த வகையில் தமிழர்களுடைய பொங்கல் விழா உற்பத்தி சார்ந்த கூட்டு வாழ்வினையும், கூட்டு உணர்வினையும், கூட்டுச்செயல்பாட்டினையும் வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது.
‘பழையன கழிதலும், புதிய புகுதலும் கால வகையினானே’ எனும் இலக்கண வரியின் மூலம் பழையனவற்றிலிருந்து புதுமை உருவாவது காலத்தின் சுழற்சி என்பதை அறிய முடிகிறது. பொங்கல் விழாவின் முதல் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய துணி முதலிய பொருட்களை தீயிட்டு கொளுத்தி விட்டுவிட்டால் நன்மை கிடைக்கும் என்பதற்காக பழைய பொருட்களை இந்நாளில் எரிப்பதுண்டு. இவ்வாறான நிகழ்வில் தான் பழைமையான ஓலைச்சுவடிகளை புனல்வாதம் எனும் பெயரில் எரிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.
இதற்கடுத்ததாக காப்புக்கட்டுதல் எனும் நிகழ்வினைச் செய்வதுண்டு. இது நாட்டுப்புற நம்பிக்கை சார்ந்த வளமைச் சடங்காகும். மக்களை நன்கு காக்க வேண்டுமென நாட்டுப்புற தெய்வத்திடம் வேண்டி வீட்டுக்கூரையின் மேல்பகுதியில் மாங்குழை, பாலாங்குழை, கூளப்பூ முதலியவைகளை வைப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இது மார்கழி கழிவின் இறுதியாய்ப் கொண்டாடுவதாகும்.
அடுத்ததாக தை முதல் நாளாகும். இதுவே தமிழ் ஆண்டின் முதல் நாள். இது தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கமாகும். சித்திரை என்பது பார்ப்பனர்கள் வந்தபின்னரே தமிழ் ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டது. இதுவும், ஆரியமயமாதலின் சூழ்ச்சி என்றே சொல்லலாம். தமிழ் இலக்கண மரபின்படி பார்த்தோமானால் பொழுது சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் சிறு பொழுது என்பது ஒரு நாளை ஆறுபொழுதுகளாக பிரிப்பதாகும். பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டினை பன்னிரெண்டு திங்கள்களாகப் பிரிப்பதாகும். இவ்வமைப்பின் அடிப்படையில் பார்த்தோமானால் தை மாதத்தையே முதல் மாதமாக கொள்ள வேண்டும். எனவேதான் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்” எனும் பழமொழி உருவாகியது. ஒன்றின் தோற்றத்தைத்தான் பிறப்பு என்று கூற முடியும். பிற வேறு எந்த தமிழ் மாதத்தையும் பிறப்பு என்கிற அடைமொழி கொடுத்து கூறுவது மரபன்று. ஆதலால், தை மாதமே தமிழ்ப்புத்தாண்டாகும். இதனை கொண்டாடும் விதமாகவே மாதத்தின் முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதற்கடுத்ததாக உழவுத்தொழிலுக்கு நன்றி கூறும் வழிபாட்டு மரபாக ஆடு, மாடுகளைப் பராமரித்தல் எனும் நிலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் சந்தித்து உறவுமுறைகளை மேம்படுத்தும் விதமாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது மக்களின் கூட்டு வாழ்க்கை முறையினைமேன்மைப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து நிலத்திற்கும், உழவுத்தொழிலுக்கும் வலிமை உருவாக வேண்டும் என்பதற்காக பொங்கல் செய்து கொண்டாடுவது வழிபாட்டு மரபோடு இணைக்கப்பட்டது. நிலத்தில் விளைந்த நெல்லரிசியினைக் கொண்டும், கரும்பு, வெல்லம் முதலியவைகளைப் படைத்து பொங்கலிட்டு வழிபடுவர். பின்னர் பொங்கலினையும், கரும்பினையும் நிலத்திற்குப் படையலிட்டு உழவுத்தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு உணவாக உண்ணக் கொடுப்பதுண்டு. தொடக்க காலத்தில் இவ்வழிபாடு மருதநிலத்திலேயே தோன்றியிருக்கும். ஏனென்றால் மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியாகும். இந்நிலத்தில் தான் நெல், கரும்பு முதலிய உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் குறிஞ்சி, முல்லை முதலிய நிலங்களிலும் இவை கொண்டாடப்பட்டது. பின்பு இவ்வழிபாடு பரவலாக்கம் பெற்றது என்று கூற முடியும்.
பொங்கல் வைக்கும் தினத்தன்று பொங்கிவரும் பால்நீரை ஆராவாரத்தோடு ‘பொங்கலோ பொங்கல்; பால் பொங்க, பச்சரிசி பொங்க’ என வேளாண் உற்பத்தியையும் சமூக விருத்தியையும், பெருக்குவதற்காகவே பொங்கல் சமைத்தல் நிகழ்த்தி வருவதுண்டு. பொங்கலில் பொங்கிய பால்நீரை எடுத்து வீட்டுக்கூரையில் தெளிப்பதை வழக்கமாக செய்யவதுண்டு. திணைமாறி வந்த ஆந்தையை விரட்டும் விதமாக இச்சடங்கை தொடக்கத்தில் செய்தனர். இதனை பொங்கழி என்றும் பொங்கித் தெளித்தல் சடங்கு என்றும் கூறுவர்.
பொங்கல் உணவுப்பண்டமாக இருப்பினும், உள்ளார்ந்து நோக்கும் போது, பண்பாட்டு இருப்பின் வேரிலிருந்து கிளர்ந்த தமிழரின் உணவுப் பண்பாடாகப் பார்ப்பதற்கு இடமுண்டு. பொங்கல் எனும் சொல் பொங்கு எனும் பகுதிச் சொல்லில் இருந்து கல் எனும் விகுதிச் சொல் இணைந்து பொங்கல் எனும் சொல் உருவாக்கம் பெறுகிறது. இச் சொல் பொங்குதல் எனும் உள்ளீட்டிலிருந்தே உருவாகியுள்ளது. பொங்குதல் எனும் சொல்லிற்கு தமிழ் அகராதி பல அர்த்தங்களைத் தந்துள்ளது. பொங்குதல், கொதித்தல், கொந்தளித்தல், செழித்தல், சமைத்தல், உயருதல், மேலேருதல், வளர்தல், விளம்புதல், விளங்குதல், செறுக்குறுதல், மகிழ்தல். இவ்வாறு பல அர்த்தங்களில் பொங்குதல் எனும் சொல் பயன்பட்டுள்ளன. இதன் பின்னனியில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பொங்குதல் எனும் அடிக்கருத்தில் அமைந்த பாடல்களைப் பதிவு செய்துள்ளன.
பொங்கின சிலம்பு ஃபொங்கி மறத்திடை மான மேற்க்கொண்டு ஃ பொங்குதலின்றி புரையோர் நாட்பண் ஃ பொங்கு நீர் ஞாலம்ஃ வன்கொங்கை பொங்கஃ போர்த்தொழில் வேட்கைபூண்டு பொங்கினாஃ பொங்குகாலம்ஃ தழைக்குமஃபொங்கழியாலை புகையொடு பரந்துபொங்கல்படி ஃபொங்கல் இனாம் இவ்வாறு தமிழ் இலக்கண இலக்கியங்களில் அமைந்துள்ளன. பொங்குதல் என்பது உணவை சமைக்கும் போது ஏற்படும் நிலையினைக் குறிக்கும் சொல்லாக மட்டுமில்லாமல் உற்பத்தியோடும், அறிவு வளர்ச்சியோடும், சமூக விருத்தியோடும், வளமைக்கான குறியீடாகவும் ஆராவாரத்திற்காகவும் உயர்வுக்காகவும் என பல நிலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
தமிழர் வழிபாட்டு மரபில் பொங்கல் விழா பாரம்பரியமிக்க, தொன்மைமிக்க விழாவாகும். இதனை கொண்டாடுவது தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைப் பேணுவதாகும். இன்றைய சூழலில் பொங்கல் விடுமுறைக்கான நாட்களாவே அணுகப்பட்டு வருகிறது. உள்ளார்ந்து நோக்கும் போது மனிதர்கள் உற்பத்தியிலிருந்து அந்நியமாகி வருகின்றதை இது காட்டுகிறது. விளைநிலங்கள் கான்கிரீட் வீடுகளாகவும், நீண்ட சாலைகளாவும் மாறிய சூழலில் இயற்கை சார்ந்த உற்பத்தி நிலங்கள் காவுவாங்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் நவீன கலாச்சாரத்தாலும், உலகமயமாக்கலாலும், நவீன முதலாளித்துவச் சூழல்களாலும் பாரம்பரிய உற்பத்தி சார்ந்த பண்பாட்டு மரபும் தமிழர் வாழ்வியலும் அழிக்கப்படுகின்றன. இச்சூழலில் தமிழின் பாரம்பரியத் தொன்மையான பொங்கலை பண்பாட்டின் அடையாளமாகவே கொண்டாடி மகிழ்வோம்.
- ம.கருணாநிதி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர்.
அறிவியல் நோக்கோடு பொங்கலை நோக்கினால் அது மார்கழி மாதம் ஏழாம் திகதி மட்டில் தான் பொங்கல் வரும் ஏனென்றால் சூரியன் மகர கோட்டிலிருந்து வடதிசை நோக்கி நகரும் முதலாவது நாள் அதாவது வட இந்தியாவில் இதை மகர சங்கராந்தி என்றுதான் கூறுவார் ஆகவே வடதிசை நோக்கி நகரும் நாள் மார்கழி ஏழாம் தேதி அப்புறம் எப்படி பொங்கல் தை முதலாம் திகதி வந்தது என்பதைப் பார்க்க வேண்டும் அறிவியல் சார்ந்து இப்பொழுது கோள்களின் இயக்கத்தை நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமானால் செவ்வாய் கிரகம் தனது ஒரு சுற்று சுற்ற பூமியின் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும் வியாழன் 12 வருடங்களும் சனி முப்பது வருடங்களும் எடுக்கின்றன இவைதான் காலக்கணிப்பின் அடிப்படை நம் தமிழ் முன்னோர்கள் வைக்கப்பட்டிருக ்கும் என நான் நம்புகிறேன் ஏனென்றால் 12 24 30 60 இவைகள் நேரம் கணிக்கும்போது சர்வசாதாரணமாக எல்லாரிடமும் காணலாம் ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் நாள்காட்டி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது ஏனெனில் அவர்களுடைய திருத்தங்கள் நாலு வருடத்துக்கு ஒருமுறை ஒரு நாளை கூட்டுவது 120 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாளை கூட்டுவது போன்ற செம்மை ஆக்கங்கள் உள்ளது ஆனால் தமிழர் பயன்படுத்தும் ஐந்து அங்கத்தில் இப்படியான குறைபாடு இல்லை மிகவும் துல்லியமாக இத்தனை நாள் இத்தனை மணிநேரம் இத்தனை வினாடியில் வருடம் பிறக்கிறது என்று குறிக்கப்பட்டிர ுக்கும் பஞ்சாங்கம் என்பது தமிழரின் சொத்து அது ஆரியர்களின் சொத்து என்று கூறுவது தவறான விடயம் ஏனெனில் அது இந்தியாவைவிட வெளியிடங்களில் இல்லை எம்மிடமே களவெடுத்து அதை வேறு வடிவில் நிமிடம் தருகிறார்கள் எடுத்துக்காட்டா க அரசன் ராஜன் ஆக மீண்டும் தமிழ் இடமே திரும்பி வருகிறது எனவே பஞ்சாங்கத்தின்ப டி வியாழனின் சுற்றுவட்டம் பன்னிரண்டாக பிரிக்கப்பட்டு ராசி என்கிறோம் இவ்வாறுதான் வருடம் 60 வருடத்துக்கு ஓர் முறை திரும்பத் திரும்ப வருவது செவ்வாயும் சனியும் ஒரே புள்ளியில் சந்திப்பதை வைத்துத்தான் கணக்கிடப்பட்டு இருக்கும் ஏன எனக்குத் தெரிந்த அறிவியலை வைத்து எண்ணிப் பார்க்கிறேன் ஆகவே தமிழர் வானியல் எவ்வாறு மார்கழி ஏழாம் திகதி பிறக்கவேண்டிய தை மாதம் ஒரு இருபத்தைந்து நாள் பின்னோக்கி சென்றது என்பதை சிந்தித்துப் பார்க்கும்போது பூமி அச்சு பெற்று சுழல்கிறது ஆனால் அது சுழல்கின்ற அச்சு ஒரே இடத்தில் இருப்பதில்லை அதுவும் சுழன்று கொண்டேதான் இருக்கிறது ஒரு பம்பரத்தை சுற்றிவிட்டால் பம்பரம் அதன் அச்சு பற்றி மிக வேகமாக சூழல் அதேநேரம் அதன் அச்சு மிக வும் மெதுவாக சுழன்று கொண்டுதான் இருக்கும் பம்பரம் சுற்றி நின்ற வேகத்தோடு ஒப்பிடும்போது அது சுற்றும் வேகம் மிக மெதுவாகவே நடைபெறும் எனவே இதை அவதானிப்பதற்கு ஒரு குரு சீட பரம்பரை போதுமானதாக இருந்திருக்க முடியாது அதனால்தான் இதற்கான திருத்தம் இருக்கவில்லை என்று நான் எண்ணிப் பார்க்கின்றேன் ஆகவே எமது 5 அங்கம் திருத்தப்பட்டு தை மாதம் பிறப்பது மகரத்தில் இருந்து சூரியன் வடதிசை நோக்கி நகரம் முதலாவது நாள் எனில் அது தற்போதைய மார்கழி மாதம் ஏழாம் திகதி ஆகத்தான் இருக்க முடியும் அதுதான் அறிவியல் சார்ந்த கணக்காக இருக்கும் பூமியின் அச்சு திசைமாறி இருக்கிறது என்பதற்கு அறிவியல் சார்ந்த ஆதாரமாக தற்பொழுது காணப்படும் பாலைவனங்களே சான்றாகும் ஏனெனில் அவை ஒரு காலத்தில் கடலாக இருந்தது ஆனால் அச்சு மாற்றத்தின் போதும் கடல்நீர் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்தது கடல் இருந்த இடம் பாலைவனமாக அங்கு வேறு தாவரங்கள் வளர முடியாத படி காணப்படுகின்றன ஏனென்றால் கடலின் அடிப் பகுதி மிகவும் உப்பும் கனிமங்களும் நிறைந்ததாக காணப்படும் அங்கு தாவரம் வளர்வதற்கான சூழ்நிலை காணப்படாது
அறிவுசார் அறிவியல்சார் பார்வை என்பது ஆயகலைகள் 64 கண்கொண்டு பார்க்கப்பட வேண்டும்
பஞ்சாங்கம் கூறுவதை அறிவியற்கூறு என்று வாதிடுதல் சரியன்று. காலக்கணிப்பு முறையை தொல்தமிழர் கண்டறிந்திருந்த போதும் அதை பஞ்சாங்கமெனத் திரித்துப் புகுத்தியதும், கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் கி.மு-க்களிலேயே கண்டறிந்திருந்த ும் அவற்றை கோவில்களில் வைத்து பூ போட்டு அர்ச்சித்துக்கொ ண்டும், இருந்த பஞ்சாங்கங்களை அறிவியல் என்றிடுதல் சரியா? பஞ்சாங்க மரபு இன்றும் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை. பஞ்சாங்கம் கேள்விக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைககளுள் ஒன்றாகவே இந்திய எல்லைக்குள் அடிப்படைவாதிகளி ன் இருப்பைத் தக்கவைக்கின்ற பிடிவாதங்களால் பிடித்தடைக்கப்ப ட்டிருக்கிறது என்பேன். அறிவியல் பார்வை சான்றுகளின் அடிப்படையில் நிறுவப்படுவது, விவாதங்களால் இறுதிப்படுத்தப் படுவது, மாற்றங்களை ஏற்பது. இதே கோளியக்கத்தை கி.பி 16-களில் கண்டறிந்த கெப்ளரும், கோபர்நிக்கசுமே அறிவியல் ரீதியாக நிறுவினார்கள். முன்னமே கண்டறிந்திருந்த ும் மூடர்களாய் கோளியக்கம் வாழ்க்கையை மாற்றிடும் என்கிற பஞ்சாங்க மரபினை அறிவியலென்று அறிவினர் ஏற்க ஒட்டார்.
பாலைவனங்கள் கடல்களென்கிறீர் "குறிஞ்சியும் முல்லையும் முறைமையின் திரிந்து பாலை என்பதோர் படிவங்கொள்ளும்" என்ற தொல்லிலக்கியச் சான்றை அறியமாட்டீர்.
ஆயக்கலைகள் 64-க்கும் உள்ள கண்களைக்கொண்டு அறிவியலைப் பார்ப்பதா? என்ன கூற முயல்கிறீர்!
(#எனக்குத் தெரிந்த அறிவியலை வைத்து எண்ணிப் பார்க்கிறேன்) என
உங்களுக்குத்தெரிந்த அறிவியலை வைத்துத் தீர்மானிக்கிறீர ் என்ற ஒப்புதலையும் அளித்திருப்பதால ் விவாதத்திற்கு இடமளிக்காமல் சென்றிடுகிறீர்.
கலை என்பதன் வேர்ச்சொல் கல் என்ற கல்வியைத்தான் குறிக்கும் என நான் அறிந்த தமிழை வைத்துக்கொண்டு எண்ணிப் பார்க்கிறேன்
1எlழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்) 2.எழுத்தாற்றல் (லிபிதம்)3.கணித ம்4.மறைநூல் (வேதம்)5.தொன்மம ் (புராணம்)6.இலக் கணம் (வியாகரணம்)7.நய னூல் (நீதி சாத்திரம்)8.கணி யம் (சோதிட சாத்திரம்)9.அறந ூல் (தரும சாத்திரம்)10.ஓக நூல் (யோக சாத்திரம்)11.மந ்திர நூல் (மந்திர சாத்திரம்)12.நி மித்திக நூல் (சகுன சாத்திரம்)13.கம ்மிய நூல் (சிற்ப சாத்திரம்)14.மர ுத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)15.உற ுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)16.மற வனப்பு (இதிகாசம்)17.வன ப்பு18.அணிநூல் (அலங்காரம்)19.ம துரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித ்தல்20.நாடகம்21 .நடம்22.ஒலிநுட் ப அறிவு (சத்தப் பிரமம்)23.யாழ் (வீணை)24.குழல்2 5.மதங்கம் (மிருதங்கம்)26. தாளம்27.விற்பயி ற்சி (அத்திரவித்தை)2 8.பொன் நோட்டம் (கனக பரீட்சை)29.தேர் ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)30.யான ையேற்றம் (கச பரீட்சை)31.குதி ரையேற்றம் (அசுவ பரீட்சை)32.மணிந ோட்டம் (ரத்தின பரீட்சை)33.நிலத ்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)34.போர் ப்பயிற்சி (சங்கிராமவிலக்க ணம்)35.மல்லம் (மல்ல யுத்தம்)36.கவர் ச்சி (ஆகருடணம்)37.ஓட ்டுகை (உச்சாடணம்)38.ந ட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)3 9.காமநூல் (மதன சாத்திரம்)40.மய க்குநூல் (மோகனம்)41.வசிய ம் (வசீகரணம்)42.இத ளியம் (ரசவாதம்)43.இன் னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)44.பிறவுய ிர் மொழியறிகை (பைபீல வாதம்)45.மகிழுற ுத்தம் (கவுத்துக வாதம்)46.நாடிப் பயிற்சி (தாது வாதம்)47.கலுழம் (காருடம்)48.இழப ்பறிகை (நட்டம்)49.மறைத ்ததையறிதல் (முஷ்டி)50.வான் புகவு (ஆகாயப் பிரவேசம்)51.வான ்செலவு (ஆகாய கமனம்)52.கூடுவி ட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)53.தன் னுருக் கரத்தல் (அதிருசியம்)54. மாயச்செய்கை (இந்திரசாலம்)55 .பெருமாயச்செய்க ை (மகேந்திரசாலம்) 56.அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)57.நீர் க்கட்டு (சலத்தம்பனம்)58 .வளிக்கட்டு (வாயுத்தம்பனம்) 59.கண்கட்டு (திருட்டித்தம்ப னம்)60.நாவுக்கட ்டு (வாக்குத்தம்பனம ்)61.விந்துக்கட ்டு (சுக்கிலத்தம்பன ம்)62.புதையற்கட ்டு (கனனத்தம்பனம்)6 3.வாட்கட்டு (கட்கத்தம்பனம்) 64.சூனியம் (அவத்தைப் பிரயோகம்)
குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து ஏற்படும் வரை நிலத்தையே தொல்காப்பியர் பாலை என்று குறிப்பிடுகிறார ் என நான் எண்ணிப் பார்க்கிறேன் ஏனெனில் தொல்காப்பியர் நினைவகத்தை நிலப்பகுதி வட வேங்கடம் தென்குமரி இரண்டுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியே அவர் கடல்கோளினால் கொள்ளப்பட்டு கடல் நடுவே இலங்குகின்ற இலங்கையை கூட நிலத்தினை வைக்கும்போது கணக்கில் எடுக்கவில்லை என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது நான் கூறுகின்ற பாலைவனம் என்பது எடுத்துக்காட்டா க அரேபியாவில் காணப்படும் பாலைவனங்களே
கோழியக்கம் என்பது பருவநிலையை ஏற்படுத்துகிறது இவை மனித வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது கோடையும் மாரியும் மாறி மாறி வருவதால்தான் மனித வாழ்க்கை இயங்கிக்கொண்டே இருக்கிறது என்பதை பஞ்சாங்கம் அறியாத சிறுபிள்ளை கூட உணர்ந்து கொள்ளும்
தமிழர் வரலாற்றின் அளவுகோலுக்கு கிருத்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளும் அளவுகோல் சரியானதாக என்னால் ஏற்க முடியவில்லை ஏனெனில் அது ஒரு நேர்கோட்டு அளவியல் கிருத்துவ பிறந்தது மையமாகவும் அதற்கு முன்னும் பின்னும் காலம் கணிக்கப்படுகிறத ு தமிழர்கள் தொல்காப்பியர் உட்பட ஏற்றுக்கொண்ட தத்துவம் சுழற்சித் தத்துவம் இதுதான் இயற்கை எனவே யுகங்களை அடிப்படையாக வைத்து காலத்தை கணிப்பது தமிழர்களின் மரபு ஒன்றுக்கு தோற்றம் இருக்குமாயின் அதற்கு மறைவும் இருக்கும் எனவே அக்காலப்பகுதியி ல் பத்து அலகுகளாக பிரித்து பத்தில் நான்கு முதல் யுகமாகும் பக்கத்தில் 3 இரண்டாவது இடமாகவும் பத்தில் 2 மூன்றாவது யுகம் ஆகும் பத்தில் ஒன்று இறுதி யுகம் ஆகும் இது மனித வாழ்க்கைக்கும் பொருந்தும் வேண்டுமாயின் பட்டினத்தார் பாடிய ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி என்ற பாடலை பார்க்கவும்
தொல்காப்பியர் கூட ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை எமது காலக்கணிப்பு யுகங்கள் வாயில் ஆனது ஒரு பொருள் தோன்றினால் அது நிலை நின்று மீண்டும் மறையும் எனவே இந்த தோற்றத்திற்கும் மறைவுக்கும் இடைப்பட்ட காலத்தை நான்கு யுகங்களாக பிரிக்கப்படுகின ்றன முதலாவது யுகம் பத்தில் நான்கு பகுதியாகவும் இரண்டாவது யுகம் பத்தில் மூன்று பகுதியாகவும் மூன்றாவது யுகம் பத்தில் இரண்டு வகையாகவும் நிருதி யுகம் பதில் ஒரு பகுதியாகவும் காணப்படும் இது மனித வாழ்க்கைக்கும் பொருந்தும் வேண்டுமென்றால் பட்டினத்தார் பாடிய ஒரு மட மாதும் ஒருவனும் என்ற பாடலை பார்க்கவும்
குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து உருவாக்கம் நிலம் பாலை நிலம் அதாவது வரண்ட நிலம் நான் குறிப்பிடுவது அரேபியாவில் காணப்படுகின்ற பெரிய பாலைவனங்கள் ஆகும் தொல்காப்பியர் நிலத்துக்கு அனைவருக்கும் போது அவருடைய எல்லை வடவேங்கடம் தென்குமரி ஆகியவற்றிற்கு இடைப்பட்டது கடல்கோளினால் கொள்ளப்பட்டு கடல் நடுவே இலங்குகின்ற குமரிக் கண்டத்தின் எஞ்சிய பகுதியான இலங்கை கூட அவர் கருத்தில் எடுக்கவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது
கோள்களின் இயக்கத்தால்தான் பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது இந்த மாற்றம் மனிதரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனவே ஐந்து அங்கத்தை அறிந்திடாத சிறு குழந்தை கூட கோள்களின் இயக்கம் மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டுபண்ணுகிறது என்பதை அறிந்து கொள்ளும்
புல்லாகிப் பூடாகி மரமாகி
புழுவாகி பாம்பாகி பறவையாய் பல்விருகமாகி மனிதராய்
என்ற அறிவியல் உண்மையை 150 வருடங்களுக்கு முன்னர் சார்லஸ் டார்வின் கண்டறிந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியருக் கு அறிவித்தார் அவரிடமிருந்து மாணிக்கவாசகர் கற்றுக்கொண்டார்
தமிழர்களின் மெய்யியல் மார்க்கமான சைவ சமயம் குன்றி சமணமும் பவுத்தம் அன்னியர்களால் தமிழர்களிடம் திணிக்கப்பட்டு நாட்டில் கொலை மலிந்து காணப்பட்ட காலத்தில் திருநாவுக்கரசர் சமணத்திலிருந்து மீண்டும் சைவத்திற்கு வந்த அந்தக் காலப்பகுதியில் சமண மதம் பாண்டியநாட்டில் கோலோச்சிய நேரத்தில் சைவத்தின் உண்மையை அறிவிக்க சம்பந்தர் சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு புறப்பட்டார் அவரை தடுத்த திருநாவுக்கரசர் இன்று நாள் நன்றாக இல்லை என உரைத்தார் ஆனாலும் சம்பந்தர் பஞ்சாங்கத்தில் அவ்வளவு நம்பிக்கை கொள்ளாமல் கோளறு பதிகம் பாடி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர ் இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் இன்றிலிருந்து கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன் எமது தமிழ் நாள்காட்டி சைவர்களால் பின்பற்றப்பட்டு ள்ளது அதாவது சைவம் மீண்டும் உயிர் பெற்று வளர ஆரம்பித்த காலம் அது எனக்குத் தெரிந்த அறிவியல் வரலாற்று பின்புலத்தில் சிந்தித்தேன் ஆனால் அன்று எழுதப்பட்ட பஞ்சாங்கத்தில் ஒரு ஆண்டு கணிப்பிடும் பொழுது சிறு முனை வழு ஏற்பட்டது அது 0.016 நாள் இது ஒரு வருடத்தின் ஒப்பிடும் பொழுது மிக சொற்பமே ஆனால் இதற்கான திருத்தத்தை 1500 ஆண்டுகளாக மேற்கொள்ளாமல் தமிழர்கள் அப்பரால் பின்பற்றப்பட்டத ு என்பதற்காக அப்படியே எடுத்துக் கொண்டுள்ளார்கள் ஆனால் அவருக்கு முதல் வாழ்ந்த வள்ளுவர் சொல்லுகிறார் எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனவே நாங்கள் அறிவுக் கண்கொண்டு பார்த்தோமானால் இத்தனை 1500 ஆண்டுகளாக மேற்கொள்ளாமல் விட்ட பிழை இன்று அது 24நாட்கள் ஆக உள்ளது எனவே இந்த திருத்தம் செய்யப்பட்டு தை மாதம் பிறப்பது தற்போதைய மார்கழி மாதம் ஏழாம் நாள் என்பதை மேற்கொள்ள வேண்டும் ஏனென்றால் அறிவியலின் படி அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி நகர ஆரம்பிக்கின்றான்
0.016×1500=24
RSS feed for comments to this post